இனி வில்லன் இல்லை: கரிகாலன்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்று கரிகாலன் கூறினார். 'அரவான்' படத்தின் மூலம் ரீ என்ட்ரியாகி இருக்கும் கரிகாலன் நிருபர்களிடம் கூறியதாவது: 'சோலையம்மா' படத்தில் வில்லனாக அறிமுகமானேன், 'தாய்மனசு', 'அடிமை சங்கிலி', 'அம்மன் கோவில் வாசலிலே' உட்பட பல படங்களில் வில்லனாக நடித்தேன். 'வைரவன்' என்ற படத்தை இயக்கி நடித்தேன். பிறகு நடிப்பை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினேன். 7 வருட இடைவெளிக்குப் பிறகு 'அரவான்' வாய்ப்பு வந்தது. அதுவும் வில்லன் வாய்ப்புதான் என்றாலும் நடித்தேன். அது நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இனி வில்லான நடிக்க மாட்டேன். எனது எடையை 30 கிலோ குறைத்திருக்கிறேன். இனி நல்ல கேரக்டர்கள் அமைந்தால் மட்டுமே நடிப்பேன்.


 

Post a Comment