பிரபுதேவாவின் பெயரை அழிக்க நயன்தாரா பிளாஸ்டிக் சர்ஜரி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரபுதேவாவுடன் காதல் முறிந்த நிலையில், கையில் பச்சை குத்திய அவரது பெயரை அழித்துவிட முடிவு செய்துள்ளார் நயன்தாரா. இதற்காக அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்கிறார்.
இயக்குனரும் நடிகருமான பிரபுதேவாவை தீவிரமாக காதலித்து வந்தார் நயன்தாரா. இதனால் தனது மனைவியை பிரபுதேவா விவாகரத்து செய்தார். ஜீவனாம்சமாக பல கோடி மதிப்புள்ள சொத்துகளை வழங்கினார். பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா.

இதற்கிடையே சமீபத்தில் திடீரென பிரபுதேவா, நயன்தாரா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்தனர். பண விவகாரம் காரணமாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அதனால் பிரிந்ததாகவும் தனது குழந்தைகளை கவனிப்பதில் பிரபுதேவா அதிக நேரம் ஒதுக்குவது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை அதனால் காதல் முறிந்ததாகவும் பலவிதமாக பேசப்பட்டது. இது பற்றி இருவருமே வாய் திறக்கவில்லை. இந்நிலையில் தனது கையில் பச்சை குத்திய பிரபுதேவாவின் பெயரை அழிக்க முடிவு செய்துள்ளார் நயன்தாரா. பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டால் முற்றிலும் அழித்துவிடலாம், கையும் அதே அழகுடன் இருக்கும் என அவருக்கு டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு தயாராகி வருகிறார். அஜீத்தின் புதிய படம், நாகார்ஜுனா, ராணா ஆகியோருடன் நடிக்கும் தெலுங்கு படங்களின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன் பச்சை குத்தியதை அழிக்க அவர் முடிவு எடுத்துள்ளார்.


 

Post a Comment