பாலா இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் அதர்வா. 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படம் நடிகர் அத்ர்வாவுக்கு ஒரளவுக்கு பெருமை தேடித் தந்தது. இந்தப் படத்தை அடுத்து, பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் அதர்வா, இந்த படம் அதர்வாவின் நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 'அவன்- இவன்' படத்துக்கு பிறகு புதுமுகங்கள் நடிக்கும் படத்தை பாலா இயக்குவதாக கூறப்பட்டது. இப்போது, அதர்வா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதை 'ராஜபாட்டை' படத்தை தயாரிக்கும் பிவிபி சினிமா நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இந்தப் படம் மலையாள நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. அந்த நாவலின் பெயரையே - எரியும் தணல் - படத்துக்கு பாலா வைத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. எரியும் தணல் என்று படத்துக்கு பெயர் வைத்தது நமது கற்பனை போலிருக்கிறது. பாலா அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கும் பெயர் 'பரதேசி'.
+ comments + 1 comments
Amazing experience for u,pls go immediately this site and see this videos: (par..)
www.youtube.com/user/stephenroy019
Post a Comment