பெப்சி - தயாரிப்பாளர் பிரச்னையால் வாய்ப்பை இழந்தார் பிந்து மாதவி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பெப்சி, தயாரிப்பாளர்கள் மோதலால் படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளது. இந்நிலையில் இப்பிரச்னையால் ஒப்பந்தமான பட வாய்ப்பை இழந்துள்ளார் பிந்து மாதவி. 'வெப்பம்', 'கழுகு' படங்களில் நடித்திருப்பவர் பிந்து மாதவி. சீனு ராமசாமி இயக்கும் 'நீர் பறவை' படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமானார். இதன் ஷூட்டிங் இம்மாதம் தொடங்க இருந்தது. ஆனால் சம்பள விவகாரம் தொடர்பாக பெப்சி அமைப்புக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. மே 2ம் தேதி முதல்தான் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதனால் 'நீர் பறவை' ஷூட்டிங்கை தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்தது. அந்த நேரத்தில் தெலுங்கு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் 'நீர் பறவை' படத்தில் நடிக்க முடியாத சூழல் பிந்து மாதவிக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் படத்திலிருந்து விலகியுள்ளார். இது பற்றி சீனு ராமசாமி கூறுகையில்,'ஸ்டிரைக் பிரச்னையால் ஷூட்டிங் தள்ளிப்போகிறது. அந்த நேரத்தில் கால்ஷீட்டை மாற்றியமைக்க முடியாத நிலையில் பிந்து மாதவி இருக்கிறார். இதனால் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்கிறோம்' என்றார். இப்போது பிந்து மாதவிக்கு பத¤லாக 'நீர் பறவை' படத்தில் சுனேனா நடிக்க உள்ளார்.


 

Post a Comment