பெண்கள் குழந்தை பெறும் மெஷின் அல்ல

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பெண்கள் குழந்தை பெறும் மெஷின் அல்ல என்றார் காஜல் அகர்வால். அவர் கூறியதாவது:  10 வருடங்களுக்கு முன்பு பெண்கள், பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகித்ததில்லை. கல்யாணம் செய்துகொள்வது, மெஷின¢ போல் குழந்தைகளை பெற்றுக்கொள்வது என்ற நடைமுறையில்தான் இருந்தது. நல்லவேளையாக அந்த நிலை மாறி இருக்கிறது. சமுதாயத்தில் பெண் களுக்கு சம உரிமை வழங்கப்படுகிறது. எந்தவொரு பெண் ணுக்கும் தனது கனவை நனவாக்கும் சுதந்திரமான வாய்ப்பு அமைந்திருக்கிறது. அந்த வாய்ப்பு எனக்கும் அமைந்திருக்கிறது. என் தொழிலையும், வாழ்க்கையையும் சந்தோஷமாக அனுபவிக்கிறேன். ஒவ்வொரு பெண்ணும் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சுதந்திரமாக வாழ்வதற்கான தகுதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் அது உங்களை சமுதாயத்தில் உயரமான இடத்துக்கு அழைத்துச் செல்லும்  என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.


 

Post a Comment