இனி கோலிவுட்டில் அதிக கவனம் : ஏ.ஆர்.ரகுமான்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சமீபகாலமாக தமிழில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த படங்கள் குறையாகவே உள்ளது. இதனால் இசைப்புயலின் ரசிகர்கள் ஏக்கத்தில் இருந்தனர். மேலும், பாலிவுட், ஹாலிவுட் என படு பிசியாக உள்ள ஏ.ஆர்.ரகுமான், குறிப்பிட்ட சில தமிழ் படங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறார். இதனையடுத்து, தமிழில் ஒரு வருடத்துக்கு 5 தமிழ் படங்களுக்கு இனி இசையமைக்க திட்டமிட்டிருப்பதாக ஏ.ஆர்.ரகமான் தெரிவித்துள்ளார். தற்போது மணிரத்னம் படத்திற்கு இசையமைத்து வரும் ரகுமான், மேலும் நான்கு தமிழப் படங்களுக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். மணிரத்னத்தின் 'கடல்', ரஜினிகாந்த்தின் 'கோச்சடையான்', தனுஷின் 'மரியான்', கௌதம் மேனனின் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' போன்ற படங்களுக்கு ரகுமான் இசையமைக்கிறார்.


 

Post a Comment