மூன்று ஹீரோக்களை இயக்குவது நட்புதான்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'3 பேர் 3 காதல்' படத்தில் அர்ஜுன், சேரன், விமல் நடிக்கிறார்கள். வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்த ஹீரோக்களை இயக்குவது நட்புதான் என்றார் இயக்குனர் வசந்த். அவர் மேலும் கூறியதாவது: அர்ஜுன், சேரன், விமல் மூன்று பேருமே என் படத்தை விரும்புகிறவர்கள், என்னை விரும்புகிறவர்கள். அதனால் நான் கேட்டதும் சம்மதித்தார்கள். யாருக்கு முக்கியத்துவம், என்ற பேச்சுக்கு இடமில்லை. அவரவர் பங்களிப்பை அவரவர் செய்து கொடுக்கிறார்கள். இனி வரும் காலங்களில் பல ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் படங்கள் அதிகம் வரும். நானும் அந்த முயற்சியை எடுத்திருக்கிறேன். படம் வெளிவந்த பிறகுதான் இந்த கேரக்டரில் இவர்கள் நடித்ததுதான் சரி என்று தெரியும். மூன்று பேரை நான் இயக்குவதற்கும், என் இயக்கத்தில் அவர்கள் நடிப்பதற்கும் நட்பு மட்டுமே காரணம். என் படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். இதில் 6 பாடல்கள். நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். சேரன் சம்பந்தப்பட்ட பகுதிகள் படமாக்கப்பட்டு விட்டது. தற்போது அர்ஜுன் சம்பந்தப்பட்டவை படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்து, விமல் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.


 

Post a Comment