தமிழில், 'சக்கரகட்டி' படத்தில் 'டாக்ஸி டாக்ஸி', 'விண்ணைத்தாண்டி வருவாயா'வில், 'ஓமணப்பெண்ணே', '7ஆம் அறிவு' படத்தில், 'ஓ ரிங்கா ரிங்கா', 'வாரணம் ஆயிரம்' படத்தில், 'அடியே கொல்லுதே' உட்பட ஏராளமான பாடல்களை பாடியிருப்பவர் பென்னி தயாள். இவர் பாடி 'வாழ்க்கை டிஜே' என்ற ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இதில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்டோபர் பிரதீப் என்பவர் பாடல்களை எழுதியுள்ளார். இசை அமைப்பாளர் சார்லஸ் பாஸ்கோ தயாரித்துள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பிறகு நிருபர்களிடம் பென்னி தயாள் கூறியதாவது:
சினிமாவில் பாட ஆரம்பித்து நான்கு வருடங்கள்தான் ஆகிறது. சில வருடங்களுக்கு முன் லண்டனில் ஒரு விழாவில் கலந்துகொண்டபோதுதான் இப்படியொரு ஆல்பம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இதில் சார்லஸ் பாஸ்கோவுடன் இணைந்து நானும் இசை அமைத்துள்ளேன். சினிமாவுக்கு இப்போது இசை அமைப்பேனா என்பது தெரியாது. தொடர்ந்து இதுபோன்ற ஆல்பங்களை வெளியிட ஆர்வமாக இருக்கிறேன். இவ்வாறு பென்னி தயாள் கூறினார்.
சினிமாவில் பாட ஆரம்பித்து நான்கு வருடங்கள்தான் ஆகிறது. சில வருடங்களுக்கு முன் லண்டனில் ஒரு விழாவில் கலந்துகொண்டபோதுதான் இப்படியொரு ஆல்பம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இதில் சார்லஸ் பாஸ்கோவுடன் இணைந்து நானும் இசை அமைத்துள்ளேன். சினிமாவுக்கு இப்போது இசை அமைப்பேனா என்பது தெரியாது. தொடர்ந்து இதுபோன்ற ஆல்பங்களை வெளியிட ஆர்வமாக இருக்கிறேன். இவ்வாறு பென்னி தயாள் கூறினார்.
Post a Comment