ஹீரோவை துரத்தி துரத்தி காதலிக்கும் நடிகை

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
'நான் உங்கள் மனைவி' எனக் கூறிக்கொண்டு இந்தி நடிகரை துரத்தி துரத்தி காதலிக்கிறார் நடிகை வாஸ்தவிகா. இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் 'ஜப் வி மெட்', 'கமீனே' உள்ள¤ட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஷாஹித் கபூர். கரீனா கபூரின் முன்னாள் காதலர். மறைந்த பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார். இவரது மகள் வாஸ்தவிகா. 'எய்ட்Õ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் சமீபத்தில் ஷாஹித் கபூர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் குடியேறினார். அன்று முதல் ஷாஹித்துக்கு பிரச்னை ஆரம்பமானது. வாஸ்தவிகா தன்னை ஷாஹித்தின் மனைவி என்று கூறிக்கொண்டார். ஷாஹித் ஷூட்டிங் புறப்பட்டால் அவரை பின்தொடர்வது, வாசல் கேட்டிலேயே ஷாஹித் வரும் வரை காத்திருந்து வரவேற்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஷாஹித்துக்கு பின்னர் இதுவே பெரிய இம்சையாக மாறியது.

இதுபற்றி வாஸ்தவிகா குடும்பத்தினர் கூறும்போது, 'சில வருடத்துக்கு முன் ஷாஹித்தை நடன வகுப்பில்தான் சந்தித்தார் வாஸ்தவிகா. அன்று முதல் அவரை காதலிக்க தொடங்கிவிட்டார். இதற்கு மன்னிப்பு கேட்டு ஷாஹித்துக்கு வாஸ்தவிகாவின் அம்மா கடிதம் எழுதினார். Ôஎன் சொந்த வாழ்க்கையில் யாரும் தலையிடாதீர்கள். இது என் கணவருக்கு பிடிக்காது' என வாஸ்தவிகா குடும்பத்தினரை திட்ட ஆரம்பித்தார். சமீபத்தில் செக்யூரிட்டிகளை ஏமாற்றிவிட்டு 13வது மாடியிலிருக்கும் ஷாஹித் வீட்டுக்குள் நுழைந்துவிட்டார். பிரச்னை பெரிதானது. ஆனால், வாஸ்தவிகா மனநலம் பாதித்தவர் அல்ல' என்றனர். இது குறித்து ஷாஹித் கபூரின் மேனேஜர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நன்குமார் மெடர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.


 

Post a Comment