கொல்லம்: ரஜினி குணமடைய வேண்டி கேரளாவைச் சேர்ந்த மோகினியாட்ட கலைஞர் ஹேமலதா குருவாயூர் கோயிலில் இன்று நடனமாடி பிரார்த்தனை செய்கிறார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் சிங்கபூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைய வேண்டி பல்வேறு ஆலயங்களில் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த புகழ் பெற்ற மோகினியாட்ட கலைஞரான ஹேமலதாவும் விசேஷ பிரார்த்தனை செய்யவிருக்கிறார்.
ரஜினி குணமடைய வேண்டி குருவாயூர் கோயிலில் இன்று ஒன்றரை மணி நேரம் கிருஷ்ணர் பாடல்களுக்கு அவர் நடனமாடி பிரார்த்தனை செய்கிறார். பிற்பகல் 2.45 மணிக்கு நடனம் தொடங்குகிறது. கடந்த ஆண்டில் திருச்சூரில் தொடர்ந்து 123 மணி நேரம் 15 நிமிடங்கள் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த இவர் ரஜினியின் தீவிர ரசிகை.
இது குறித்து ஹேமலதா கூறுகையில்,
ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு உடல் நலம் பாதித்ததை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். எனவே அவர் குணமடைய என்னால் ஆன ஒரு பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் சிங்கபூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைய வேண்டி பல்வேறு ஆலயங்களில் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த புகழ் பெற்ற மோகினியாட்ட கலைஞரான ஹேமலதாவும் விசேஷ பிரார்த்தனை செய்யவிருக்கிறார்.
ரஜினி குணமடைய வேண்டி குருவாயூர் கோயிலில் இன்று ஒன்றரை மணி நேரம் கிருஷ்ணர் பாடல்களுக்கு அவர் நடனமாடி பிரார்த்தனை செய்கிறார். பிற்பகல் 2.45 மணிக்கு நடனம் தொடங்குகிறது. கடந்த ஆண்டில் திருச்சூரில் தொடர்ந்து 123 மணி நேரம் 15 நிமிடங்கள் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த இவர் ரஜினியின் தீவிர ரசிகை.
இது குறித்து ஹேமலதா கூறுகையில்,
ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு உடல் நலம் பாதித்ததை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். எனவே அவர் குணமடைய என்னால் ஆன ஒரு பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.