ஹீரோ சம்பளத்தை நெருங்குகிறார்கள், கோடிக்கு மாறிய ஹீரோயின்கள்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாலிவுட் ஹீரோயின்கள்போல் கோலிவுட் நடிகைகளும் கோடியை தாண்டி சம்பளம் பெறுகின்றனர். சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா 'சன்ஜீர்' படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இதன் மார்க்கெட் விலை, எதிர்பார்ப்பை கூடுதலாக்க பாலிவுட் முன்னணி நடிகையை ஒப்பந்தம் செய்தனர். இதில் நடிப்பதற்காக பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.9 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது. பாலிவுட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே ஹீரோயின்களில் அதிக சம்பளம் பெற்ற நடிகை என்ற பெயரை தட்டிச் சென்றிருக்கிறார் பிரியங்கா. இதுவரை ஐஸ்வர்யாராய் அதிகபட்சமாக ரூ.6 கோடியும், கரீனா கபூர் ரூ.8 கோடியும் பெற்றிருக்கின்றனர்.

இது பற்றி தெலுங்கு பட தயாரிப்பாளர் கூறும்போது, 'Ôகோலிவுட், டோலிவுட் நடிகைகளும் பாலிவுட் ஹீரோயின்களைப்போல் கோடிகளை தொட்டிருக்கின்றனர். 'நண்பன்Õ படத்திற்காக இலியானா ரூ.1.5 கோடியும், காதல் விவகாரத்தால் நடிக்காமல் ஒதுங்கி இருந்த நயன்தாரா மீண்டும் நடிக்க வருவதால் அவரும் அதே அளவுக்கு சம்பளம் வாங்கியுள்ளார். த்ரிஷா ரூ. 1.2 கோடி வாங்கி இருக்கிறார். அனுஷ்கா, காஜல் அகர்வால் ஆகியோரும் கோடிகளை எட்டிப் பிடித்திருக்கின்றனர். தமன்னா, சமந்தா ஆகியோர் அதை எட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ளனர். 'இவ்வளவு அதிக சம்பளம் நடிகைகளுக்கு தருவது தேவையா?' என்று சிலர் கேட்கின்றனர்.

பாலிவுட் படங்களைப்போல் இப்போது வெளிநாடுகளில் கோலிவுட், டோலிவுட் படங்களும் வர்த்தக ரீதியான வரவேற்பு பெற்றிருக்கிறது. அதை ஒப்பிடும்போது ஹீரோயின்களுக்கு கோடிகளில் சம்பளம் தருவது தவறில்லை ÕÕ என்றார். 'மலையாளத்தை பொறுத்தவரை காவ்யா மாதவன் ரூ.17 லட்சம் பெறுகிறார். அதுபோல் கன்னடத்தில் திவ்யா ரூ.40 லட்சம் பெறுகிறார். கன்னடத்தில் 'சூப்பர்Õ படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா ரூ.50 லட்சம் பெற்றதுதான் அதிக சம்பளம¢' என்று கன்னட தயாரிப்பாளர் ஒருவர் குறிப்பிட்டார்.


 

Post a Comment