'ரூ. 10 லட்சத்தை லவட்டி விட்டார் பவர் ஸ்டார் சீனிவாசன்': போலீஸில் புகார்!

|

Dr Srinivasan
சென்னை: எனக்கு ரூ. 2 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு நடிகர் டாக்டர் சீனிவாசன் ஏமாற்றி விட்டார் என்று சென்னை காவல்துறையில் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

இது உண்மையிலேயே மோசடிப் புகாரா அல்லது சீனிவாசன் மேற்கொள்ளும் பப்ளிசிட்டி ஸ்டண்ட்டா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை புஜங்கராவ் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதியை சந்தித்து ஒரு புகார் அளித்தார். அதில், லத்திகா உள்ளிட்ட ஒரு சில படங்களை தயாரித்து, நடித்திருப்பவர் டாக்டர் சீனிவாசன். இவர், நண்பர் ஒருவர் மூலம் எனக்கு அறிமுகமானார்.

எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொழில் நடத்த ரூ.2 கோடி கடன் வாங்கித் தருவதாக சீனிவாசன் என்னிடம் கூறினார். அதற்காக முதல் கட்டமாக ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்றார். அதை நம்பி அண்ணாநகரில் உள்ள அவரது பாபா டிரேடிங் என்ற நிறுவனத்தின் பெயரில் டி.டி.எடுத்து கொடுத்தேன்.

ஆனால், சொன்னபடி ரூ.2 கோடி கடன் வாங்கித் தரவில்லை. நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது, அதையும் தரவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தப் புகாரில் கணேசன் கூறியுள்ளார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
 

Post a Comment