2 கதையில் எதை படமாக்குவது? குழப்பத்தில் முனி 3

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இரண்டு கதைகளில் எதை படமாக¢குவது என முடிவு எடுக்க முடியாமல் முனி 3 படக்குழு குழப்பத்தில் உள்ளது. லாரன்ஸ் நடித்து, இயக்கிய படம் முனி. இதன் இரண்டாம் பாகமான காஞ்சனா, சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து மூன்றாம் பாகம் ஷூட்டிங் ஜூனில் தொடங்கும் என லாரன¢ஸ் அறிவித்துவிட்டார். இப்படத்தையும் அவரே இயக்கி, நடிக்கிறார்.
ஹீரோயின், மற்ற நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை. அதே நேரம் படத்தின் திரைக்கதையும் இன்னும் எழுதி முடிக்கவில்லை லாரன்ஸ். காரணம், படத்துக்காக 2 கதைகளை தேர்வு செய்து வைத்திருக்கிறார். இதில் எதை படமாக்குவது என அவர் முடிவெடுக்காமல் உள்ளார். கதையை தேர்வு செய்துவிட்டால்,

அதற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் பட யூனிட் டிஸ்கஷன் நடத்தும். ஆனால் கதை தேர்வில் குழப்பம் நீடிப்பதால், ஷூட்டிங்கிற்கு ஒரு மாதமே உள்ள நிலையில் திட்டமிட்டபடி ஷூட்டிங் நடக்குமா என பட யூனிட்டார் சந்தேகம் அடைந்துள்ளனர். இது பற்றி லாரன்ஸ் கூறுகையில், ரபேல் தெலுங்கு பட வேலைகளில் பிசியாக உள்ளேன். இதை முடித்த தும் அடுத்த மாதம் முனி 3 பட ஷூட்டிங் தொடங்கும். 2 கதைகளில் ஒன்றை தேர்வு செய்துவிட்டால், அதன்பின் வேலை சுலபமாகிவிடும். திட்டமிட்டபடி ஷூட்டிங் நடத்துவோம் என்றார்.


 

Post a Comment