நடிகை நயன்தாராவின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை நயன்தாராவின் தந்தையின் உடல் நலம் மோசமானதையடுத்து அவரை திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவரின் நிலை தற்போது மேலும் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்து வருகிறார்களாம்.
இதையடுத்து நயன் அப்பாவுக்கு உதவியாக மருத்துவமனையில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. நயனதாராவின் தந்தைக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம். இதனால்தான் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனராம்.
பிரபுதேவாவுடனான உறவு முறிந்து தற்போது தான் அவர் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். ஒரு புறம் நயன் படங்களில் பிசியாக இருக்க மறுபுறம் பிரபுதேவா இந்தி படமான ரவுடி ரத்தோரை இயக்குவதில் பிசியாக இருக்கிறார்.
தல அஜீத்துடன் நயன் நடிக்கும் விஷ்ணுவர்தன் படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் மும்பையில் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாராவின் தந்தையின் உடல் நலம் மோசமானதையடுத்து அவரை திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவரின் நிலை தற்போது மேலும் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்து வருகிறார்களாம்.
இதையடுத்து நயன் அப்பாவுக்கு உதவியாக மருத்துவமனையில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. நயனதாராவின் தந்தைக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம். இதனால்தான் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனராம்.
பிரபுதேவாவுடனான உறவு முறிந்து தற்போது தான் அவர் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். ஒரு புறம் நயன் படங்களில் பிசியாக இருக்க மறுபுறம் பிரபுதேவா இந்தி படமான ரவுடி ரத்தோரை இயக்குவதில் பிசியாக இருக்கிறார்.
தல அஜீத்துடன் நயன் நடிக்கும் விஷ்ணுவர்தன் படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் மும்பையில் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment