சினிமாவில் ஒரு கதாபாத்திரம் நடித்தவர் திடீரென இறந்து விட்டாலோ, அல்லது நடிக்க வராமல் வம்பு செய்தாலோ அந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படும். ஆனால் தொலைக்காட்சி தொடர்களில் அப்படி இல்லை. எந்த நடிகையோ, நடிகரோ வம்பு செய்கிறாரா கவலையே படமாட்டார்கள். இவருக்கு பதில் இவர் என்று கார்டு போட்டுவிட்டு சீரியலை தொடர்ந்து கொண்டு இருப்பார்கள். அப்படி ஆள் மாறிய சீரியல்கள் பற்றி ஒரு ரவுண்ட் அப்
சன் டிவியின் தொடர்களிலே டாப்ல உள்ள தொடர்கள்ல என்னப் பிரச்சனையோ தெரியில..இப்படித்தான் கொஞ்ச நாட்களா ஆள்மாறாட்ட வேலை நடக்குது.
தென்றல் தொடரில் மாமியார் கதாபாத்திரம் பிரசித்தி பெற்றது. கதாநாயகி துளசியின் மாமியாராக நடித்த சாந்தி வில்லியம்-ஐ தூக்கிட்டு அவருக்குப் பதிலாக ஜெயலட்சுமி நடித்து வருகிறார். ஆனால் குரல் அதேதான். சாந்தி வில்லியமோட முக பாவனை, அதுவும் குத்திக்காட்டிப் பேசறப்போ நக்கலாக ஒரு சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க ..அந்த நடிப்பு யாருக்குமே வராது.மெட்டிஒலி நாடகத்திலேயே ஒரு டிபிகல் நடுத்தர குடும்பத்து மாமியாராக வாழ்ந்துக் காட்டியிருப்பாங்க.
மாமியார்தான் மாறிட்டாங்களேன்னு நினைச்சா திடீர்னு துளசியின் அம்மாவா நடிக்கிற ஐஸ்வர்யாவைத் தூக்கிட்டு அவங்களுக்கு பதிலா சுதாசந்திரனை போட்டுட்டாங்க. இந்த நாடகத்தில அம்மா கதாபாத்திரமும் கிட்டத்தட்ட வில்லி மாதிரிதான். அம்மா மகள் சண்டையில் ஐஸ்வர்யாவோட ரியாக்சன் என்னவா இருக்கும்னு ஆவலோட எதிர்பார்த்துக்கிட்டு இருந்த நேரத்தில ஐஸ்வர்யாவுக்கு ஆப்பு வச்சுட்டாங்க பாவம். இவங்களுக்குப் பதிலா இந்தக் கேரக்டர்ல நடிக்கிற சுதாசந்திரனை பார்த்தாலே பாவமா இருக்கு.அந்த வேடம் கொஞ்சம் கூட செட் ஆகவே இல்ல.
அதேபோல தென்றலில் அர்ச்சனாவின் ரெண்டாவது தங்கை மாறினார். அதேபோல் மூன்றாவது தங்கையும் ஆள்மாறினார். கடைசியில் அந்த கதாபாத்திரத்திற்கு மாலை போட்டுவிட்டார்கள் பாவம். தற்போது செல்வத்தின் தோழியான நந்தினியாக நடித்த லதாராவை தூக்கிவிட்டு தற்போது வேறு ஒருவர் வந்திருக்கிறார். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் இப்பொழுது நந்தினியாக நடிப்பவர்தான் லதாராவிற்கு முன்பாக நந்தினியாக நடித்தவர் என்பது கூடுதல் தகவல் ( திருமதி செல்வத்தை ஆரம்பத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு புரியும்)
இதே கூத்து நாதஸ்வரம் தொடரிலும் அரங்கேறி வருகிறது. கோபியின் மூத்த தங்கையாக நடித்தவர் இதுவரை நான்குமுறை மாறிவிட்டார் என்ன காரணமோ தெரியலே. தினசரி விடாமல் சீரியல் பாக்கிறவங்களுக்குதான் இந்த மாற்றம் தெரியும் கொஞ்சநாள் பாக்காமல் விட்டு புதுசா பார்த்தா யாருக்கு பதில் யார் என்பதில் குழம்பம் வந்தாலும் வரும்.
இயக்குநர்களே, சாரி இதில் இயக்குநர்களை குற்றம் சொல்ல முடியாது சமயத்தில் இயக்குநர்களே தூக்கியடிக்கப்படும் சம்பவமும் நடப்பதுண்டு. செல்லமே தொடரை இதுவரை நான்கைந்து இயக்குநர்கள் இயக்கியிருப்பார்கள் என நினைக்கிறேன்.
கிரியேட்டிவ் ஹெட் கொஞ்சம் மனசு வைங்க சீரியல் கன்டியூனிட்டி புரிய மாட்டேங்குது !
( சீரியல் பார்த்து மனசு உடைந்தோர் சங்கத்தினரின் புலம்பல் இது)
சன் டிவியின் தொடர்களிலே டாப்ல உள்ள தொடர்கள்ல என்னப் பிரச்சனையோ தெரியில..இப்படித்தான் கொஞ்ச நாட்களா ஆள்மாறாட்ட வேலை நடக்குது.
தென்றல் தொடரில் மாமியார் கதாபாத்திரம் பிரசித்தி பெற்றது. கதாநாயகி துளசியின் மாமியாராக நடித்த சாந்தி வில்லியம்-ஐ தூக்கிட்டு அவருக்குப் பதிலாக ஜெயலட்சுமி நடித்து வருகிறார். ஆனால் குரல் அதேதான். சாந்தி வில்லியமோட முக பாவனை, அதுவும் குத்திக்காட்டிப் பேசறப்போ நக்கலாக ஒரு சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க ..அந்த நடிப்பு யாருக்குமே வராது.மெட்டிஒலி நாடகத்திலேயே ஒரு டிபிகல் நடுத்தர குடும்பத்து மாமியாராக வாழ்ந்துக் காட்டியிருப்பாங்க.
மாமியார்தான் மாறிட்டாங்களேன்னு நினைச்சா திடீர்னு துளசியின் அம்மாவா நடிக்கிற ஐஸ்வர்யாவைத் தூக்கிட்டு அவங்களுக்கு பதிலா சுதாசந்திரனை போட்டுட்டாங்க. இந்த நாடகத்தில அம்மா கதாபாத்திரமும் கிட்டத்தட்ட வில்லி மாதிரிதான். அம்மா மகள் சண்டையில் ஐஸ்வர்யாவோட ரியாக்சன் என்னவா இருக்கும்னு ஆவலோட எதிர்பார்த்துக்கிட்டு இருந்த நேரத்தில ஐஸ்வர்யாவுக்கு ஆப்பு வச்சுட்டாங்க பாவம். இவங்களுக்குப் பதிலா இந்தக் கேரக்டர்ல நடிக்கிற சுதாசந்திரனை பார்த்தாலே பாவமா இருக்கு.அந்த வேடம் கொஞ்சம் கூட செட் ஆகவே இல்ல.
அதேபோல தென்றலில் அர்ச்சனாவின் ரெண்டாவது தங்கை மாறினார். அதேபோல் மூன்றாவது தங்கையும் ஆள்மாறினார். கடைசியில் அந்த கதாபாத்திரத்திற்கு மாலை போட்டுவிட்டார்கள் பாவம். தற்போது செல்வத்தின் தோழியான நந்தினியாக நடித்த லதாராவை தூக்கிவிட்டு தற்போது வேறு ஒருவர் வந்திருக்கிறார். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் இப்பொழுது நந்தினியாக நடிப்பவர்தான் லதாராவிற்கு முன்பாக நந்தினியாக நடித்தவர் என்பது கூடுதல் தகவல் ( திருமதி செல்வத்தை ஆரம்பத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு புரியும்)
இதே கூத்து நாதஸ்வரம் தொடரிலும் அரங்கேறி வருகிறது. கோபியின் மூத்த தங்கையாக நடித்தவர் இதுவரை நான்குமுறை மாறிவிட்டார் என்ன காரணமோ தெரியலே. தினசரி விடாமல் சீரியல் பாக்கிறவங்களுக்குதான் இந்த மாற்றம் தெரியும் கொஞ்சநாள் பாக்காமல் விட்டு புதுசா பார்த்தா யாருக்கு பதில் யார் என்பதில் குழம்பம் வந்தாலும் வரும்.
இயக்குநர்களே, சாரி இதில் இயக்குநர்களை குற்றம் சொல்ல முடியாது சமயத்தில் இயக்குநர்களே தூக்கியடிக்கப்படும் சம்பவமும் நடப்பதுண்டு. செல்லமே தொடரை இதுவரை நான்கைந்து இயக்குநர்கள் இயக்கியிருப்பார்கள் என நினைக்கிறேன்.
கிரியேட்டிவ் ஹெட் கொஞ்சம் மனசு வைங்க சீரியல் கன்டியூனிட்டி புரிய மாட்டேங்குது !
( சீரியல் பார்த்து மனசு உடைந்தோர் சங்கத்தினரின் புலம்பல் இது)
Post a Comment