சினேகா - பிரசன்னாவை வாழ்த்திய கருணாநிதி

|

Karunanidhi Blesses Sneha Prasanna
புதுமணத் தம்பதிகள் சினேகாவையும், பிரசன்னாவையும் நேரில் வந்து வாழ்த்தினார் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி.

தமிழ் திரையுலகில் கடந்த ஒரு வாரமும் சினேகா - பிரசன்னா திருமண விசேஷம்தான். நலங்கு, நிச்சயதார்த்தம், வரவேற்பு, திருமணம், நடிகர்கள் - முக்கிய பிரமுகர்களுக்காக ஸ்பெஷல் வரவேற்பு - விருந்து என தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள்.

இந்த சிறப்பு வரவேற்பு மற்றும் விருந்து சென்னை கிண்டியில் உள்ள புதிய நட்சத்திர ஹோட்டலில் சனிக்கிழமை இரவு நடந்தது.

முன்பு நடந்த வரவேற்பு மற்றும் திருமணத்துக்கு வராத நட்சத்திரங்கள், முக்கிய பிரமுகர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்து புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினர்.

எப்போதும்போல வாழ்த்துவதில் முதலில் நின்றது இந்த முறையும் நடிகர் சிவகுமார் குடும்பம்தான். சிவகுமார் தன் மனைவியோடு வந்திருந்தார்.

நடிகர் சூர்யா தன் மனைவி ஜோதிகாவுடன் வந்து வாழ்த்தினார். நடிகர் ஜெயம் ரவி, பிரபு, விவேக், சின்னிஜெயந்த், இயக்குநர்கள் கே பாலச்சந்தர், லிங்குசாமி, தரணி, வசந்த், ஹரி, சேரன் உள்பட ஏராளமானோர் வந்திருந்து வாழ்த்தினர்.

தயாரிப்பாளரும் எம்ஜிஆர் கழகத் தலைவருமான ஆர்எம் வீரப்பன் நேரில் வந்து வாழ்த்தினார்.

கருணாநிதி வாழ்த்து

இந்த நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது திமுக தலைவர் கருணாநிதி வருகை. மனைவி ராஜாத்தி அம்மாள் மற்றும் மகள் கனிமொழியுடன் வந்த கருணாநிதி, மணமக்களை வாழ்த்தினார். சினேகா - பிரசன்னாவின் திருமணப் படம் ஒன்றில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார் கருணாநிதி.
 

Post a Comment