ஒரே நேரத்தில் 3 மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் பசுபதி. அவர் கூறியதாவது: 'அரவான்' படத்துக்காக சில தமிழ் படங்களை ஒப்புக்கொள்ள முடியாமல் போய்விட்டது. இப்போது மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. நல்ல கேரக்டர்கள் அமைகிறது. அதை தவறவிட்டுவிடக் கூடாது என்பதற்காக அங்கு நடித்து வருகிறேன். இப்போது தமிழ் படங்களுக்கு கதை கேட்டு வருகிறேன். அடுத்து தமிழில், 'லட்சுமி' என்ற படத்தில் நடிக்கிறேன். இதில் வித்தியாசமான கேரக்டர். ஒரு படத்தில் நிறைய வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நடிப்பது கொஞ்ச காலம்தான். அதற்குள் விதவிதமான கேரக்டர்களில் நடிக்க விருப்பம். வழக்கமான வில்லன், அண்ணன் கேரக்டர்களை தவிர்க்கிறேன். சுவாரஸ்யமான, சவாலான கேரக்டராக இருந்தால் சின்ன படம், பெரிய படம் என்று பார்ப்பதில்லை. புதுமுகம் ஹீரோவாக இருந்தாலும் நடிப்பேன்.
Post a Comment