'எல்லாத்தையுமா' சொல்லப் போறார் சோனா?

|

Sona Write Her Autobiography   
'சும்மா போரடிக்குதுல்ல.. எதையாவது கொளுத்திப் போடலாம்' ரகம் போலிருக்கிறது நடிகை சோனா.

மாதத்துக்கு ஒரு சர்ச்சை என கணக்கு வைத்துக் கொண்டு அவர் சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.

எஸ்பிபி சரண் விவகாரத்துக்குப் பிறகு, தன் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான உண்மைகளை சினிமாவாக எடுத்து அனைவரையும் அலற வைக்கப் போவதாக அறிவித்தார்.

அதன் பிறகு இல்லையில்ல.. என் கதையின் ஒரு பகுதியை மட்டும்தான் எடுக்கப் போகிறேன் என்றார்.

இப்போது பட விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டவர், அடுத்து புத்தகம் எழுதப் போவதாக அறிவித்துள்ளார்.

சினிமாவில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை புத்தகத்தில் குறிப்பிடப் போகிறாராம். அதோடு தான் நடத்தும் யுனிக் நிறுவனம், அதற்கு வந்த சோதனைகள் பற்றியும் அதில் எழுதுகிறாராம்.

'கோடம்பாக்கத்துக்கு வந்த சோதனையடா' என கண் சிமிட்டுகிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்!
Close
 
 

Post a Comment