நடிகை உதயதாராவுக்கு நிச்சயதார்த்தம் - துபாய் மாப்பிள்ளையைக் கைப்பிடிக்கிறார்!

|

Udayathara Getting Engaged
கோலிவுட்டில் மேலும் ஒரு நடிகைக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது. அவர் உதயதாரா.

தீ நகர், கண்ணும் கண்ணும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை உதயதாரா. சொந்த ஊர் கேரள மாநிலம் கோட்டயம்.

நடித்தது போதும் என்ற முடிவுக்கு வந்த அவர், துபாயைச் சேர்ந்த ஜுபின் ஜோசப் என்பவரை திருமணம் செய்கிறார். ஜுபின் விமானத்தில் பைலட்டாக உள்ளார்.

உதயதாரா - ஜுபின் ஜோசப் திருமண நிச்சயதார்த்தம் நேற்று கோட்டயத்தில் விமரிசையாக நடந்தது.

வரும் மே 16-ம் தேதி கொச்சி அருகே உள்ள கடுத்துருத்தி தேவாலயத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

திருமணத்துக்குப் பிறகு நடிக்கப்போவதில்லை என உதயதாரா கூறியுள்ளார்.
 

Post a Comment