தமிழ், இந்தியில் பனி துளி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கணேஷ் வெங்கட்ராம், ஷோபனா, கல்பனா பண்டிட் நடிக்கும் படம், 'பனி துளி'. எழுதி, இயக்கியுள்ளார் நட்டிகுமார். படம் பற்றி நிருபர்களிடம் கணேஷ் வெங்கட்ராம் கூறியதாவது: இந்தப் படம் ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியுள்ளது. முழு படமும் வெளிநாட்டில் படமானது. சாப்ட்வேர் என்ஜினீயராக வருகிறேன். சென்னையில் இருந்து வெளிநாடு செல்கிறேன். அங்கு ஏற்படும் காதல், அதில் வரும் பிரச்னைகள் என்னையும், என் வாழ்க்கையையும் எப்படி மாற்றுகிறது என்பது கதை. அடுத்த காட்சி இதுவாக இருக்கும் என்று யூகிக்க முடியாத விதத்தில் நட்டிகுமார் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்துள்ளார்.

இந்தப்படம் என்னை வேறொரு தளத்துக்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தாலும், தமிழுக்குத்தான் முக்கியத்துவம் தருவேன். 'பனி துளி' தமிழில் ரிலீசாகும் நாளில் இந்தியிலும் ரிலீசாகிறது. இவ்வாறு கணேஷ் வெங்கட்ராம் கூறினார். இயக்குனர் நட்டிகுமார் கூறும்போது, ''தனுஷ் நடித்த '3' படம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் பேசப்பட்ட ஐதராபாத் நட்டிகுமார் வேறு, நான் வேறு. 'பனி துளி' ஷூட்டிங் முடிந்து விட்டது. அடுத்த மாதம் ரிலீசாகிறது'' என்றார்.


 

Post a Comment