ஒரு வழியாக சென்னையிலேயே டேரா போட முடிவு செய்து விட்டார் அமலா பால். இதற்காக ஒரு பிரமாண்ட வீட்டையும் வாடகைக்குப் பிடித்து விட்டாராம். அங்கு பால் காய்ச்சி குடியேறியும் விட்டார். இனிமேல் இங்கேயேதான் எல்லாமாம்.
கேரளாவிலிருந்து வந்திறங்கிய நடிகைகள் பட்டாளத்தில் ஒருவர்தான் அமலா பால். ஆரம்பத்தில் சரியாக மார்க்கெட் இல்லாமல் தவித்து வந்த அவருக்கு மைனா வந்து மார்க்கெட்டை டைட்டாக்கி விட்டது. இதனால் பயங்கர பிசியாகி விட்டார், அத்தோடு இல்லாமல் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடவும் ஆரம்பித்தார்.
விக்ரம், ஆர்யா ஆகியோருடன் ஜோடி சேர்ந்த இவர் இப்போது தெலுங்கிலும் அதகளம் செய்து வருகிறார்.
இதுவரை ஹோட்டலிலேயே வாசம் செய்து வந்த அமலா பால், அது பல விதங்களிலும் சரிப்பட்டு வராமல் இருந்ததால் ஒரு வீட்டை இப்போது வாடகைக்குப் பிடித்து விட்டாராம். இனிமேல் சென்னையிலேயே தங்கி நடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.
மயிலாப்பூர் பக்கம் நல்ல பங்களா ஒன்று தோதாக கிடைத்துள்ளதாம். அதில்தான் பால் காய்ச்சி குடியேறியுள்ளார் அமலா பால். இனிமேல் தமிழ் சினிமாக்காரர்கள் அமலா பாலைப் பார்க்க இங்கு வந்தால் போதுமாம்...
அப்புறம் என்ன எல்லோருக்கும் சந்தோஷம்தானே...?!
கேரளாவிலிருந்து வந்திறங்கிய நடிகைகள் பட்டாளத்தில் ஒருவர்தான் அமலா பால். ஆரம்பத்தில் சரியாக மார்க்கெட் இல்லாமல் தவித்து வந்த அவருக்கு மைனா வந்து மார்க்கெட்டை டைட்டாக்கி விட்டது. இதனால் பயங்கர பிசியாகி விட்டார், அத்தோடு இல்லாமல் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடவும் ஆரம்பித்தார்.
விக்ரம், ஆர்யா ஆகியோருடன் ஜோடி சேர்ந்த இவர் இப்போது தெலுங்கிலும் அதகளம் செய்து வருகிறார்.
இதுவரை ஹோட்டலிலேயே வாசம் செய்து வந்த அமலா பால், அது பல விதங்களிலும் சரிப்பட்டு வராமல் இருந்ததால் ஒரு வீட்டை இப்போது வாடகைக்குப் பிடித்து விட்டாராம். இனிமேல் சென்னையிலேயே தங்கி நடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.
மயிலாப்பூர் பக்கம் நல்ல பங்களா ஒன்று தோதாக கிடைத்துள்ளதாம். அதில்தான் பால் காய்ச்சி குடியேறியுள்ளார் அமலா பால். இனிமேல் தமிழ் சினிமாக்காரர்கள் அமலா பாலைப் பார்க்க இங்கு வந்தால் போதுமாம்...
அப்புறம் என்ன எல்லோருக்கும் சந்தோஷம்தானே...?!
Post a Comment