மகாராஷ்டிரா மாநில சுற்றுலாத்துறை அம்பாசிடராக இருக்க நடிகை மாதுரி தீக்ஷித் ரூ.10 கோடி கேட்டதால் அவருக்கு பதிலாக நடிகர் ரித்திக் ரோஷனை அணுகியுள்ளனர்.
மகராஷ்டிரா மாநில சுற்றுலாத்துறை அம்பாசிடராக இருக்குமாறு நடிகை மாதுரி தீக்ஷிதை அம்மாநில அரசு கேட்டுள்ளது. ஆனால் அவர் ரூ.10 கோடி கேட்டதால் அப்படியே ஜகா வாங்கி நடிகர் ரித்திக் ரோஷன் பக்கம் திரும்பிவிட்டனர். கிரிஷ் 3 படப்பிடிப்பில் இருந்த ரித்திகை 3 அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடந்துள்ளது.
ரித்திக் மகாராஷ்டிரா அம்பாசிடராக இருக்க சம்மதித்துள்ளார் என்று கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று மேலும் கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து ரித்திக்கோ அவரது தந்தை ராகேஷ் ரோஷனோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
கிரிக்கெட் வீரர் சச்சினை அம்பாசிடராகப் போடலாம் என்று அரசு நினைத்தது. ஆனால் அவர் கிரிக்கெட்டில் பிசியாக இருப்பதால் அந்த வாய்ப்பு ரித்திகிற்கு கிடைத்துள்ளது.
குஜராத் சுற்றுலாத்துறை மற்றும் இன்கிரெடபிள் இந்தியா அம்பாசிடர்களான் அமிதாபும், ஆமீர் கானும் பைசா சம்பளம் வாங்கவில்லை. ஆனால் மாதுரி தான் பிறந்த மாநிலத்தை விளம்பரப்படுத்த பெருந்தொகையைக் கேட்பது அதிர்ச்சியாக உள்ளது என்று மும்பையைச் சேர்ந்த என்.ஜி.ஓ. ஸ்வாபிமான் சங்கதன் தலைவர் நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார்.
மகராஷ்டிரா மாநில சுற்றுலாத்துறை அம்பாசிடராக இருக்குமாறு நடிகை மாதுரி தீக்ஷிதை அம்மாநில அரசு கேட்டுள்ளது. ஆனால் அவர் ரூ.10 கோடி கேட்டதால் அப்படியே ஜகா வாங்கி நடிகர் ரித்திக் ரோஷன் பக்கம் திரும்பிவிட்டனர். கிரிஷ் 3 படப்பிடிப்பில் இருந்த ரித்திகை 3 அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடந்துள்ளது.
ரித்திக் மகாராஷ்டிரா அம்பாசிடராக இருக்க சம்மதித்துள்ளார் என்று கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று மேலும் கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து ரித்திக்கோ அவரது தந்தை ராகேஷ் ரோஷனோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
கிரிக்கெட் வீரர் சச்சினை அம்பாசிடராகப் போடலாம் என்று அரசு நினைத்தது. ஆனால் அவர் கிரிக்கெட்டில் பிசியாக இருப்பதால் அந்த வாய்ப்பு ரித்திகிற்கு கிடைத்துள்ளது.
குஜராத் சுற்றுலாத்துறை மற்றும் இன்கிரெடபிள் இந்தியா அம்பாசிடர்களான் அமிதாபும், ஆமீர் கானும் பைசா சம்பளம் வாங்கவில்லை. ஆனால் மாதுரி தான் பிறந்த மாநிலத்தை விளம்பரப்படுத்த பெருந்தொகையைக் கேட்பது அதிர்ச்சியாக உள்ளது என்று மும்பையைச் சேர்ந்த என்.ஜி.ஓ. ஸ்வாபிமான் சங்கதன் தலைவர் நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார்.
Post a Comment