ராஜ்யசபாவில் நடிகை ரேகாவுக்கு அருகே உட்காருவதை விரும்பாத நடிகையும், சமாஜ்வாடிக் கட்சி எம்.பியும், அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் தனக்கு வேறு இருக்கை தருமாறு ராஜ்யசபா தலைவருக்குக் கோரிக்கை விடுத்துள்ளாராம்.
அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன். அமிதாப்புடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் ரேகா. ஜெயா பச்சனுக்கும், ரேகாவுக்கும் ஆகாது. பேசிக் கொள்ள மாட்டார்கள். பார்த்துக் கொள்ள மாட்டார்கள். காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
ஜெயா பச்சன் சமாஜ்வாடி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பியாக உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ரேகாவுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து உள்ளே அனுப்பியுள்ளது காங்கிரஸ். இதனால் ஜெயா பச்சனுக்கு பெரும் தர்மசங்கடமாகியுள்ளது. நேருக்கு நேர் ரேகாவைப் பார்க்க நேரிடுமோ என்று அவர் சங்கடத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.
அதை விட முக்கியமாக, தற்போது 91வது இருக்கையில் ஜெயா பச்சன் அமர்ந்திருக்கிறார். ரேகாவுக்கு 98வது சீட் கொடுக்கப்படவுள்ளது. இதனால் ஜெயா பச்சன் பெரும் தர்மசங்கடமாகியுள்ளாராம். தனக்கு வெகு அருகே ரேகா அமருவது அவருக்கு ஒருவிதமாக உள்ளதாம். இதனால் அதைத் தவிர்க்கும் வகையில், தனக்கு வேறு சீட்டை ஒதுக்குமாறு ராஜ்யசபா தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளாராம்.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லாவிடம் ராஜ்யசபா செயலகம் ஆலோசனை நடத்தி வருகிறதாம். இதில் வேடிக்கை என்னவென்றால் ரேகாவை ராஜ்யசபா எம்.பியாக்கியதே ராஜீவ் சுக்லாவின் பரிந்துரையின் பேரில்தான் என்பதே. எனவே ரேகாவுக்கும், ஜெயா பச்சனுக்கும் ராஜ்யசபாவுக்குள் தர்மசங்கட மோதல்கள் மூண்டு விடாமல் சமாளித்து ஆளுக்கு ஒரு பக்கமாக உட்கார வைக்கும் பெரிய வேலை சுக்லாவை வந்து சேர்ந்துள்ளது.
சமீபத்தில் அமிதாப் பச்சன் அளித்த ஒரு பேட்டியில் ரேகாவுக்கு எம்.பி. பதவி கிடைத்தது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அப்போது ரேகாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தால் அதைக் கண்டு ஓட மாட்டேன் என்று பகிரங்கமாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இவ்வளவு காலமாகி விட்டது, இன்னும் எதற்கு மோதல் ஜெயா...?
அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன். அமிதாப்புடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் ரேகா. ஜெயா பச்சனுக்கும், ரேகாவுக்கும் ஆகாது. பேசிக் கொள்ள மாட்டார்கள். பார்த்துக் கொள்ள மாட்டார்கள். காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
ஜெயா பச்சன் சமாஜ்வாடி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பியாக உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ரேகாவுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து உள்ளே அனுப்பியுள்ளது காங்கிரஸ். இதனால் ஜெயா பச்சனுக்கு பெரும் தர்மசங்கடமாகியுள்ளது. நேருக்கு நேர் ரேகாவைப் பார்க்க நேரிடுமோ என்று அவர் சங்கடத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.
அதை விட முக்கியமாக, தற்போது 91வது இருக்கையில் ஜெயா பச்சன் அமர்ந்திருக்கிறார். ரேகாவுக்கு 98வது சீட் கொடுக்கப்படவுள்ளது. இதனால் ஜெயா பச்சன் பெரும் தர்மசங்கடமாகியுள்ளாராம். தனக்கு வெகு அருகே ரேகா அமருவது அவருக்கு ஒருவிதமாக உள்ளதாம். இதனால் அதைத் தவிர்க்கும் வகையில், தனக்கு வேறு சீட்டை ஒதுக்குமாறு ராஜ்யசபா தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளாராம்.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லாவிடம் ராஜ்யசபா செயலகம் ஆலோசனை நடத்தி வருகிறதாம். இதில் வேடிக்கை என்னவென்றால் ரேகாவை ராஜ்யசபா எம்.பியாக்கியதே ராஜீவ் சுக்லாவின் பரிந்துரையின் பேரில்தான் என்பதே. எனவே ரேகாவுக்கும், ஜெயா பச்சனுக்கும் ராஜ்யசபாவுக்குள் தர்மசங்கட மோதல்கள் மூண்டு விடாமல் சமாளித்து ஆளுக்கு ஒரு பக்கமாக உட்கார வைக்கும் பெரிய வேலை சுக்லாவை வந்து சேர்ந்துள்ளது.
சமீபத்தில் அமிதாப் பச்சன் அளித்த ஒரு பேட்டியில் ரேகாவுக்கு எம்.பி. பதவி கிடைத்தது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அப்போது ரேகாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தால் அதைக் கண்டு ஓட மாட்டேன் என்று பகிரங்கமாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இவ்வளவு காலமாகி விட்டது, இன்னும் எதற்கு மோதல் ஜெயா...?
Post a Comment