'வாடா போடா நண்பர்கள்', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படங்களில் நடித்தவர், யஷிகா. அவர் கூறியதாவது: 'மொழி' படத்தில் ஜோதிகா காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக நடித்தார். கன்னடத்தில் யோகராஜ் பட் இயக்கும் 'டிராமா' படத்தில், நான் ஏற்றுள்ள வேடம் அதுபோன்று இருக்கும். இந்த கேரக்டருக்காக எந்த பயிற்சியாளரையும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவழைத்தது இல்லை. 'மொழி'யில் ஜோதிகா நடிப்பைப் பார்த்து வியந்து இருக்கிறேன். ஆனால், அவரது நடிப்பை காப்பியடிக்கவில்லை. 'டிராமா' காமெடி படம் என்பதால், எனது கேரக்டரும் ஜாலியாக இருக்கும். இதையடுத்து, 'ஜெய் பஜ்ரங் பளி' படத்தில் நடிக்கிறேன். தமிழில் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.
Post a Comment