தயாநிதி அழகிரி ஏற்கெனவே க்ளவுட் நைன் எனும் நிறுவனத்தின் பெயரில் தமிழ்ப் படங்களைத் தயாரித்து வருகிறார்.
இப்போது எதிரி எண் 3 என்ற படத்தை க்ளவுட் நைன் பேனரில் எடுத்து வருகிறார்.
இப்போது புதிதாக மீகா என்டர்டெயின்மென்ட் என்ற புதிய நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார் தயாநிதி.
இந்த நிறுவனத்தின் மூலம் சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். முதல் முயற்சியாக மீகா என்டர்டெயின்மென்ட் மற்றும் வெற்றி மாறனின் சொந்தப் பட நிறுவனம் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இணைந்து புதிய படத்தை தயாரிக்கின்றன.
வெற்றிமாறனின் உதவியாளராக இருந்த மணிகண்டன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
கதை திரைக்கதையை வெற்றிமாறன் எழுத, சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதுகுறித்து தயாநிதி அழகிரி தனது ட்விட்டரில், "புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் நோக்கம், பொழுதுபோக்கு மற்றும் மீடியா தொடர்பை இன்னும் விரிவாக்குவதுதான்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்போது எதிரி எண் 3 என்ற படத்தை க்ளவுட் நைன் பேனரில் எடுத்து வருகிறார்.
இப்போது புதிதாக மீகா என்டர்டெயின்மென்ட் என்ற புதிய நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார் தயாநிதி.
இந்த நிறுவனத்தின் மூலம் சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். முதல் முயற்சியாக மீகா என்டர்டெயின்மென்ட் மற்றும் வெற்றி மாறனின் சொந்தப் பட நிறுவனம் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இணைந்து புதிய படத்தை தயாரிக்கின்றன.
வெற்றிமாறனின் உதவியாளராக இருந்த மணிகண்டன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
கதை திரைக்கதையை வெற்றிமாறன் எழுத, சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதுகுறித்து தயாநிதி அழகிரி தனது ட்விட்டரில், "புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் நோக்கம், பொழுதுபோக்கு மற்றும் மீடியா தொடர்பை இன்னும் விரிவாக்குவதுதான்," என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment