'சமர்' படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிப்பது ஏன் என்பது குறித்து சுனேனா கூறியதாவது: தற்போது 'நீர்ப்பறவை'யில் நடிக்கிறேன். இதுவரை நடித்த கேரக்டர்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது. எனக்கு திருப்புமுனையாக அமையும். 'மைக் செட் பாண்டி'யில் பணக்காரப் பெண்ணாக வருகிறேன். 'சமர்' படத்தில் இரண்டாவது நாயகியாக நடிப்பது பற்றி கேட்கிறார்கள். இரண்டாவது நாயகி என்பதைவிட, மிக முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். எனது கேரக்டர் படத்தில் திருப்புமுனையாக இருக்கும். இதுபோன்ற முக்கிய வேடத்தில் நடிக்கும்போது இரண்டாவது நாயகி, மூன்றாவது நாயகி என்று பார்க்க தேவையில்லை. இப்போது நான் நடிக்கும் படங்களில் அமைதியான, சாந்தமான கேரக்டர்கள் அமைந்துள்ளது. இதில் திறமையான நடிகை என்று பெயர் வாங்கிவிட்டு, பிறகு கிளாமரான, ஆர்ப்பட்டமான வேடங்களில் நடிப்பேன்.
Post a Comment