இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கியுள்ள ‘உயிரெழுத்து’ படத்தில் நான் ஹீரோவாக நடித்துள்ளதாக வரும் செய்திகளில் உண்மையில்லை என்று நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
இந்தப் படம் பல வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டதாகவும், அதில் ஹீரோவின் தோழனாக மட்டுமே தான் நடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கும் இயக்குனர்களில் ஆர்.சுந்தரராஜன் அவர்களும் ஒருவர்.
அவரது இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு ‘உயிரெழுத்து’ படத்தில் நடித்தேன். நான் ஏற்கெனவே நடித்த அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், அற்புதம் போன்ற படங்களைப் போன்றுதான் இந்த படத்திலும் ஹீரோவின் நண்பனாக ஒரு சில காட்சிகளிலும், ஒரே ஒரு பாடல் காட்சியிலும் நடித்திருந்தேன். நான் அதில் ஹீரோ இல்லை.
ஆனால் சமீபத்தில் உயிரெழுத்து படத்திற்காக செய்யப்பட்ட விளம்பரங்களில் நான்தான் ஹீரோ என்பது போன்று பிரதானப்படுத்தப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்னை சந்திக்கிற நண்பர்களும் இப்படத்தில் எப்பொழுது நடித்தீர்கள் என்று கேட்கிற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஆகவே, இனி ‘உயிரெழுத்து’ விளம்பரங்களில் என்னை பிரதானப்படுத்த வேண்டாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படம் பல வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டதாகவும், அதில் ஹீரோவின் தோழனாக மட்டுமே தான் நடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கும் இயக்குனர்களில் ஆர்.சுந்தரராஜன் அவர்களும் ஒருவர்.
அவரது இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு ‘உயிரெழுத்து’ படத்தில் நடித்தேன். நான் ஏற்கெனவே நடித்த அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், அற்புதம் போன்ற படங்களைப் போன்றுதான் இந்த படத்திலும் ஹீரோவின் நண்பனாக ஒரு சில காட்சிகளிலும், ஒரே ஒரு பாடல் காட்சியிலும் நடித்திருந்தேன். நான் அதில் ஹீரோ இல்லை.
ஆனால் சமீபத்தில் உயிரெழுத்து படத்திற்காக செய்யப்பட்ட விளம்பரங்களில் நான்தான் ஹீரோ என்பது போன்று பிரதானப்படுத்தப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்னை சந்திக்கிற நண்பர்களும் இப்படத்தில் எப்பொழுது நடித்தீர்கள் என்று கேட்கிற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஆகவே, இனி ‘உயிரெழுத்து’ விளம்பரங்களில் என்னை பிரதானப்படுத்த வேண்டாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment