தமிழ் படங்களை இயக்காமல் பாலிவுட்டில் கவனம் செலுத்துவது ஏன் என்பதற்கு பதில் அளித்தார் பிரபுதேவா. போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி படங்களை இயக்கிய பிரபுதேவா, இப்போது பாலிவுட் படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்துகிறார். இது பற்றி அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து ரவுடி ரத்தோர் படத்தை பாலிவுட்டில் இயக்கினேன். தொடர்ந்து பாலிவுட்டில் வாய்ப்பு வருவதால் தமிழ் படங்கள் இயக்க நேரமில்லாமல் இருக்கிறது.
நல்ல ஸ்கிரிப்ட் அமைந்ததும் இயக்குவேன். தெலுங்கு 'கிக் படத்தை சல்மானை வைத்து பாலிவுட்டில் இயக்கப்போவதாக அடிக்கடி செய்தி வருகிறது. ஆனால் சல்மான் கானை இயக்கும் ஐடியா இப்போதைக்கு இல்லை. இதையடுத்து ஷாஹித் கபூர் நடிக்கும் படத்தை இயக்க பேச்சு நடக்கிறது. அஜய் தேவகன் நடிப்பில் ஒரு படம் இயக்குகிறேன். இயக்குனரான பிறகும் நடிக்க நிறைய வாய்ப்பு வருகிறது. ஆனால் அதற்கு நேரமில்லை. சந்தோஷ் சிவன் இயக்கிய 'உருமி படத்தில் எனக்கேற்ற கதாபாத்திரம் அமைந்ததால் நடித்தேன். இவ்வாறு பிரபுதேவா கூறினார்.
நல்ல ஸ்கிரிப்ட் அமைந்ததும் இயக்குவேன். தெலுங்கு 'கிக் படத்தை சல்மானை வைத்து பாலிவுட்டில் இயக்கப்போவதாக அடிக்கடி செய்தி வருகிறது. ஆனால் சல்மான் கானை இயக்கும் ஐடியா இப்போதைக்கு இல்லை. இதையடுத்து ஷாஹித் கபூர் நடிக்கும் படத்தை இயக்க பேச்சு நடக்கிறது. அஜய் தேவகன் நடிப்பில் ஒரு படம் இயக்குகிறேன். இயக்குனரான பிறகும் நடிக்க நிறைய வாய்ப்பு வருகிறது. ஆனால் அதற்கு நேரமில்லை. சந்தோஷ் சிவன் இயக்கிய 'உருமி படத்தில் எனக்கேற்ற கதாபாத்திரம் அமைந்ததால் நடித்தேன். இவ்வாறு பிரபுதேவா கூறினார்.
Post a Comment