குத்து பாடலுக்கு இறங்கி வந்தார் சதா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹீரோயினாக நடிக்க காத்திருந்து ஏமாற்றம் அடைந்த சதா, குத்து பாடல் ஆட சம்மதித்துள்ளார். 'ஜெயம்Õ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சதா. கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணி அணிந்து நடித்த அவருக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தது. ஆனால் அடுத்தடுத்து நடித்த படங்களில் ஹேர் ஸ்டைல், காஸ்டியூம் என எல்லாவற்றையும் கவர்ச்சியாக மாற்றிக்கொண்டு நடித்தார். இதனால் ரசிகர்களிடம் மவுசு குறைய ஆரம்பித்தது. விக்ரமுடன் 'அந்நியன்Õ, அஜீத்துடன் 'திருப்பதிÕ என முன்னணி நடிகர்களுடன் நடித்தபோதும் அவரால் இழந்த மார்க்கெட்டை மீட்க முடியவில்லை. கடைசியாக அவர் தமிழில் 'புலி வேஷம்Õ படத்தில் நடித்தார்.

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என 3 படவுலகிலும் அவர் கைவிடப்பட்ட நிலையில் புதிய படங்களுக்காக காத்திருந்தார். இந்நிலையில் சுந்தர்.சி. இயக்க விஷால் நடிக்கும் புதிய படத்தில் குத்துப் பாடல் ஒன்றில் ஆட சம்மதித்திருக்கிறார். ஹீரோயின் அந்தஸ்தில் நடித்துக்கொண்டிருந்த நீங்கள் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது ஏன்? என்று சதாவிடம் கேட்டபோது, 'Ôஒருபாடலுக்கு நடனம் ஆடவேண்டும் என்று தயாரிப்பு தரப்பிலிருந்து அழைப்பு வந்தபோது அதில் நடிக்க ஆர்வமில்லை என்றேன். இது வெறும் குத்துப்பாடல் அல்ல. பட ஹீரோவுடன் ஆடும் முக்கியமான பாடல் என்றனர். அவர்கள் கூறியவிதம் நியாயமாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்ÕÕ என்றார்.


 

Post a Comment