'புலிவேஷம்', 'அய்யன்', 'விளையாடவா' படங்களில் நடித்தவர் திவ்ய பத்மினி. இப்போது 'பிள்ளைநிலா' என்ற டி.வி தொடரில் நடிக்கிறார். சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த தொடர் பற்றி சரிகம இண்டியா நிறுவன தென்மண்டல பொதுமேலாளர் பி.ஆர்.விஜயலட்சுமி கூறும்போது, ''இத்தொடர் குழந்தையை மையப்படுத்தியது. ஒரே குழந்தைக்கு இரு தாய் உரிமை கோருகிறார்கள். அதனால் என்ன நடக்கிறது என்பது கதை. திவ்யபத்மினியுடன் ஷமிதா, ராகவ் நடிக்கிறார்கள். ராஜஸ்ரீ, என்.ராய் கதை, திரைக்கதை. கிரியேட்டிவ் இயக்குனர்கள் ஆர்.செல்வபாண்டியன், பிரின்ஸ். ஒளிப்பதிவு பாலா. பால்ராஜ் இசை. நந்தகுமார் இயக்குகிறார்'' என்றார்.
Post a Comment