சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கி்ல் இருந்து விலகிய விக்ரம் பிரபு

|

Vikram Prabhu Walks Of Sattam Oru
விக்ரம் பிரபு சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் இருந்து விலகிவிட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் பேரனுமான விக்ரம் பிரபு கும்கி படத்தின் மூலம் நடிகராகிவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இன்னும் கும்கி படம் முடியாத நிலையில் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் எடுத்து ஹிட்டான சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விக்ரம் பிரவு ஒப்பந்தம் ஆனார்.

படத்தின் ஷூட்டிங் துவங்கி பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மகனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வருவதைப் பார்த்து பிரபுவும் சந்தோஷப்பட்டார். இந்நிலையில் விக்ரம் பிரபு சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் இருந்து வெளியேறிவிட்டார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. முக்கிய கதாபாத்திரமான அவர் விலகியதால் பட வேலைகள் நின்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

முதல் படத்தை முதலில் முடிப்போம் என்று அவர் கும்கி படப்பிடிப்புக்கு சென்றுவிட்டாராம். அவர் தற்போது கும்கி ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment