'பொன்மாலை பொழுது' படத்தில் ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கிறார் கிஷோர். இதுபற்றி அவர் கூறியதாவது: ஹீரோவுக்கு அப்பாவாக நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன். காரணம் அந்த அளவுக்கு எனக்கு வயதாகவில்லை. ஒரு படத்தில் அப்பாவாக நடித்து அது வெற்றிபெற்றுவிட்டால் தொடர்ந்து அப்பா கேரக்டர்களாகவே வரும் என்பதால் மறுத்தேன். ஆனால், 'பொன்மாலை பொழுது' படத்தின் அப்பா கேரக்டர் ரொம்பவே பவர்புல். ரயில்வேயில் வேலை பார்க்கும் சாதாரண ஊழியன் தன் மகனுக்காக எப்படியெல்லாம் காம்ப்ரமைசோடு வாழ்கிறார் என்கிற கேரக்டர். வழக்கமான சினிமா அப்பாவாக இல்லாமல் யதார்த்தமாக இருந்ததால் நடிக்க சம்மதித்தேன். இனி, ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்க மாட்டேன்.
Post a Comment