'என் சொந்த வாழ்க்கை பற்றி எதுவும் கேட்காதீர்கள்' என்று ஆவேசப்பட்டார், அனன்யா. அவர் மேலும் கூறியதாவது: என் திருமணம் பற்றி கேட்காதீர்கள். ரசிகர்களுக்கு என் சொந்த வாழ்க்கையைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. நான் நடிக்கும் படங்கள் பற்றி தெரிவிக்க வேண்டியது கடமை. திருமணம் எப்போது நடந்தாலும், பகிரங்கமாக நடக்கும். நானே மீடியாவிடம் சொல்வேன். தமிழில் நடிக்கவில்லை. கன்னடத்தில் நடித்த 'கோகுல கிருஷ்ணா' ரிலீசுக்கு தயார். மலையாளத்தில் பல படங்களில் நடிக்கிறேன். 'ரத்த ரக்ஷக்' படத்தில், முதல்முறையாக அக்கா, தங்கை என இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். ஒரு வேடம், பேய். தினமும் இரவு ஒரு மணிக்கு மேல் ஷூட்டிங் நடக்கும். இரண்டு மணி நேரத்துக்கு மேல் எனக்கு மேக்கப் போடுவார்கள். சைக்கோ த்ரில்லரான இப்படம், கண்டிப்பாக விருது பெற்றுத் தரும். இதில் 4 கிளைமாக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது.
Post a Comment