ஜெயா டிவியில் மனதோடு மனோ!

|

Manathodu Mano
தொலைக்காட்சிகளில் இசை நிகழ்ச்சிகள் எல்லாமே ரசிகர்களின் வரவேற்பை பெற்று விடுகின்றன. இதற்கு காரணம் இசை மீது இருக்கும் மாறாத காதல்தான். ஜெயா டிவியில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் இசைப்பிரியர்களுக்கான நிகழ்ச்சி, `மனதோடு மனோ. பாடகர் மனோ, இதனை தொகுத்து வழங்குகிறார்.

ஒவ்வொரு வாரமும் ஒரு பிரபலங்களை சந்தித்து அவர்களின் இசை மீதான ஆர்வம், சாதனை போன்றவைகளை பகிர்ந்து கொள்கிறார். அதோடு மனோவும் தனது இசைப் பயணத்தில், தான் சந்தித்த நபர்கள், வெற்றிகள், ஆச்சரியங்கள் என தனது மனதில் பொக்கிஷமாய் வைத்திருக்கும் ரகசியங்களை, இந்த நிகழ்ச்சியில் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், பாடகிகள் ஜென்சி, எஸ்.பி.சைலஜா, பாடகர்கள் பிரசன்னா, முகேஷ், இசையமைப்பாளரும், நகைச்சுவை நடிகருமான மதன்பாப், இசைக்கலைஞர் தபேலா பிரசாத், இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் கலந்து கொண்டு தங்களின் இசைப் பயண அனுபவங்களை இசையாய், பாடலாய், பேச்சாய் மனம் விட்டு பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த வாரங்களில் பாப் இசைப்பாடகி மால்குடி சுபா தனது வசீகர குரலால் பாடிய பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாது அந்த பாடலை பாடும் போது நேர்ந்த அனுபவங்களையும் நேயர்களுடன் பகிர்ந்து கொண்டார். சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை தவறாமல் பாருங்கள்.

 

Post a Comment