ஸ்டன்ட் மாஸ்டருடன் மிஷ்கின் தகராறு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட மோதலால் மிஷ்கின் இயக்கும் படத்தை விட்டு வெளியேறினார் ஸ்டன்ட் மாஸ்டர். 'சித்திரம் பேசுதடிÕ, 'அஞ்சாதேÕ, 'யுத்தம் செய்Õ, 'நந்தலாலாÕ படங்களை இயக்கியவர் மிஷ்கின். அடுத்து 'ஸ்பைடர்மேன்Õ பாணியில் 'முகமூடிÕ என்ற சூப்பர் மேன் கதையை படமாக்கி வருகிறார். ஜீவா, பூஜா ஹெக்டே நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்துக்காக சண்டை காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தார். ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் காட்சிகளை அமைத்தார். குறிப்பிட்ட ஒரு காட்சியில் திலீப் குழுவிலிருந்த ஒரு ஸ்டன்ட் நடிகர், மிஷ்கினின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடிக்காததால் அவரை பட குழுவினர் எதிரில் மிஷ்கின் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் திலீப் கோபம் அடைந்தார். இதுபற்றி இயக்குனரிடம் வாக்குவாதம் செய்தார். இருவரும் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இப்பிரச்னையையடுத்து படத்திலிருந்து விலகுவதாக திலீப் கூறினார். மிஷ்கினும் அவருக்கு பதிலாக ஆக்ஷன் பிரகாஷ் என்ற ஸ்டன்ட் இயக்குனரை ஒப்பந்தம் செய்துவிட்டார்.

இதுபற்றி திலீப்பிடம் கேட்டபோது, 'Ôஎனக்கு கைநிறைய படங்கள் இருக்கிறது. மலையாளத்தில் மட்டுமே 6 படங்களில் பணியாற்றுகிறேன். இதுதவிர தமிழில் அரை டஜன் படங்களில் பணியாற்றுகிறேன். ÔமுகமூடிÕ ஷூட்டிங்க¤ல் சில விஷயங்கள் ஒத்துப்போகவில்லை. குறிப்பாக இயக்குனர் கேட்கும் தேதிகளை வேறு படங்களுக்கு கொடுத்திருப்பதால் அதை அட்ஜெஸ்ட் செய்ய முடியவில்லை. எனவே படத்திலிருந்து வெளியேற முடிவு செய்தேன். இதுபற்றி ஸ்டன்ட் யூனியனிலும் கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறேன். மிஷ்கினுடன் எனக்கு எந்த பிரச்னையும் கிடையாதுÕÕ என்றார். 'Ôதிலீப்புடன் எந்த பிரச்னையும் இல்லைÕÕ என்றார் மிஷ்கின். பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என கூறி, இருவரையும் அமைதியாக பிரிய தயாரிப்பு தரப்பு சொன்னதாம். இதனால் இவர்கள் புகார் ஏதும் கூறவில்லை என தெரிகிறது.


 

Post a Comment