டாக்டர்கள் பற்றி டிவி நிகழ்ச்சியில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
‘சத்யமேவ ஜெயதே' என்ற டிவி நிகழ்ச்சியில் டாக்டர்களைப் பற்றி கூறிய அமீர்கான், சில டாக்டர்கள் நோயாளிகளை ஏமாற்றுகின்றனர். நோயாளிகளை அச்சுறுத்தி அவர்களிடம் பணத்தை கறக்கின்றனர் என்று குற்றம் சாட்டியிருந்தார். அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் பேசினார்கள்.
அமீர்கானின் இந்த கருத்துக்கு இந்தியா முழுவதும் உள்ள டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அமீர்கான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் டாக்டர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று அமீர்கான் தெரிவித்துள்ளார். மருத்துவத்துறையில் நடப்பதைத்தான் தான் நிகழ்ச்சியில் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பிரச்சினை எப்போ முடியுமோ தெரியலையே?
Post a Comment