மக்கள் டிவியில் சொல்லி அடி குறுக்கெழுத்துப் போட்டி

|

Makkal Tv Crosswords Program Solli Adi
குறுக்கெழுத்து புதிர்களுக்கு விடை எழுதுவது மூளை வளர்ச்சிக்கு உதவும். பெரும்பாலான நாளிதழ்கள், வார இதழ்களில் இந்த குறுக்கெழுத்துப் புதிர்போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் புதிதாக மக்கள் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ‘சொல்லிஅடி’ என்ற குறுக்கெழுத்துப் போட்டி நடத்தப்படுகின்றன. இது ஒரு நேரலை நிகழ்ச்சி.

நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்கும் கேள்விக்கு ஏற்ப பதில் கூறி குறுக்கெழுத்து போட்டியின் கட்டங்களில் நிரப்பவேண்டும். சரியான பதில் கூறுபவர்களுக்கு வீட்டு உபயோகப்பொருட்களை பரிசாக வழங்குகின்றனர் மக்கள் தொலைக்காட்சி நிறுவனத்தினர். இரவு நேரத்தில் மூளைக்கு சுறுசுறுப்பை தரும் நிகழ்ச்சி என்பதால் வரவேற்பு அதிகரித்துள்ளது.

 

Post a Comment