சன் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான மொக்கை காமெடித் தொடரான சிரிப்பு லோகத்திற்கு கல்தா கொடுத்துவிட்டனர். அதற்கு பதிலாக புதிய மர்மத் தொடர் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.
இரவு பத்துமணி ஆனாலே சிரிப்பு லோகம் என்ற பெயரில் இம்சை செய்து வந்தனர் சின்னி ஜெயந்த் கோஷ்டியினர். வென்னிற ஆடை மூர்த்தி, சின்னிஜெயந்த், சிட்டிபாபு, ஆர்த்தி என நகைச்சுவை பட்டாளங்கள் அதிகம் இருந்த காரணத்தினால் பெரிய அளவில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆரம்பித்த நாளில் அமோகமாக இருந்த நிகழ்ச்சி நாளடைவில் போராடிக்க ஆரம்பித்து. டிஆர்பியும் எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை. இதனையடுத்து சிரிப்பு லோகத்திற்கு விரைவில் கல்தா கொடுக்கப்படாலாம் என்று நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
இந்த நிலையில் எந்த வித முன் அறிவிப்பும் இன்றி சிரிப்பு லோகம் நிறுத்தப்பட்டு விட்டது. அதற்குப் பதிலாக திங்கட்கிழமை முதல் இரவு பத்து மணிக்கு ‘அந்த 10 நாட்கள்' என்ற புதிய மர்மத்தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
இதில் ஸ்ரீவித்யா, ஆர்த்தி கணேஷ்கர் உள்ளிட்ட சின்னத்திரை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இது குறுந்தொடர் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. தொடரின் முன்னோட்டமே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரிப்பு லோகம் காமெடி என்ற பெயரில் பயமுறுத்தினர். இப்போது மர்மத் தொடரை கையில் எடுத்துள்ளனர். இது பயமுறுத்துமா அல்லது சிரிக்க வைக்குமா என்பதைப் போகப் போகப் பார்க்கலாம்.
Post a Comment