வித்தியாச கேரக்டர் கேகே ஆர்வம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'பில்லா 2' படத்தில் வில்லனாக நடித்திருக்கும் கே.கே., கூறியதாவது: தமிழில் 'தெய்வதிருமகள்'தான் என்னை அடையாளம் காட்டியது. 'பில்லா 2'வில் வில்லன்களில் ஒருவனாக நடித்தேன். படத்தில் அஜீத் என்னை கொல்லும் காட்சியில் நடித்தபோது என் காலில் கத்திபட்டு காயம் ஏற்பட்டது. பின்னர் கேரவனில் ஓய்வெடுத்தேன். அங்கு வந்த அஜீத், என் காயத்துக்கு அவர் கொண்டு வந்திருந்த மருந்தை தடவி, கட்டுப்போட்டார். இதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. தற்போது, 'துப்பாக்கி' யில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். மலையாளத்தில் மோகன்லாலுடன் 'ரன் பேபி ரன்', ரேவதியுடன் 'மோழி ஆண்டி ராக்ஸ்' படங்களில் நடித்துவருகிறேன். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.


 

Post a Comment