அனுஷ்கா கால்ஷீட்டை வீணாக்கவிட்டேன் எனக்கூறுவது உண்மையல்ல என்றார் செல்வராகவன். செல்வராகன் இயக்கும் படம் 'இரண்டாம் உலகம்Õ. ஆர்யா ஹீரோ. அனுஷ்கா ஹீரோயின். இப்படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியா நாட்டில் நடந்து வருகிறது. ஏற்கனவே சுராஜ் இயக்கும் Ôஅலெக்ஸ் பாண்டியன்Õ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறார் அனுஷ்கா. இதற்கிடையில் செல்வராகவன் பட ஷூட்டிங்கிற்காக அனுஷ்கா ஜார்ஜியா சென்றுவிட்டார். மாதக்கணக்கில் செல்வராகவன் ஷூட்டிங் நடத்துவதுடன் பல நாட்கள் ஷூட்டிங் நடத்தாமல் கால்ஷீட் வீணாக்கிவிட்டாராம். இதனால் Ôஅலெக்ஸ் பாண்டியன்Õ பட ஷூட்டிங்கில் அனுஷ்கா பங்கேற்க முடியாமல் இருக்கிறார். அவர் வராதததால் இப்பட ஷூட்டிங் பாதித்திருக்கிறது என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. இதையறிந்த செல்வராகவன் கோபம் அடைந் தார். ÔÔயார் கால்ஷீட்டையும் நான் வீணாக்கவில்லைÕÕ என்று அவர் குறிப்பிட்டார். இது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் எழுதி இருப்பதாவது:
Ôஇரண்டாம் உலகம்Õ ஷூட்டிங்கில் அனுஷ்கா உள்ளிட்டவர்கள் கால்ஷீட்டை நான் வீணாக்கிவிட்டதாக சொல்கிறார்கள். இது அடிப்படையற்ற பேச்சு. சொல்லப்போனால் நாங்கள் திட்டமிட்டதைவிட வேகமாக ஷூட்டிங் நடத்தி வருகிறோம். மேலும் ஆர்யா, அனுஷ்காவிடம் அதிக நாட்கள் கால்ஷீட் தேவைப்பட்டதால் அதற்காக காத்திருந்துதான் பெற்றேன். யாருடைய கால்ஷீட்டையும் நான் வீணாக்கில்லை. இவ்வாறு செல்வராகவன் தெரிவித்தார்.
Ôஇரண்டாம் உலகம்Õ ஷூட்டிங்கில் அனுஷ்கா உள்ளிட்டவர்கள் கால்ஷீட்டை நான் வீணாக்கிவிட்டதாக சொல்கிறார்கள். இது அடிப்படையற்ற பேச்சு. சொல்லப்போனால் நாங்கள் திட்டமிட்டதைவிட வேகமாக ஷூட்டிங் நடத்தி வருகிறோம். மேலும் ஆர்யா, அனுஷ்காவிடம் அதிக நாட்கள் கால்ஷீட் தேவைப்பட்டதால் அதற்காக காத்திருந்துதான் பெற்றேன். யாருடைய கால்ஷீட்டையும் நான் வீணாக்கில்லை. இவ்வாறு செல்வராகவன் தெரிவித்தார்.
Post a Comment