சென்னை, : விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுமை மாநிலத்தில் ப்ளஸ் டூ மற்றும் 10&ம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவித் தொகைகளை நடிகர் விஜய் வழங்கினர். பின்னர் நிருபர்களிடம் பேசிய விஜய், ''கல்விக்கு உதவுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். மற்ற இயக்கங்களைப் போல இதுவும் கல்வி இயக்கமாக வளரும் என நினைக்கிறேன். இந்த உதவிகளுக்கு வேறு நோக்கம் ஏதும் இல்லை'' என்றார். விழாவுக்கு விஜய் மக்கள் இயக்கப் பொறுப்பாளர் என்.ஆனந்த் தலைமை தாங்கினார். செயலாளர்ர் ரவிராஜா, துணைத் தலைவர் ராஜேந்திரன், துணைச் செயலாளர் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment