நடிகர்கள் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பது புதிய விசயமில்லை. ஜெயா டிவியில் விசு மக்கள் அரங்கம் நடத்துகிறார். சன்டிவியில் டி. ராஜேந்தர் அரட்டை அரங்கத்தில் களம் இறங்கியுள்ளார். அந்த வரிசையில் இப்போது நடிகரும், இயக்குநருமான ரமேஷ்கண்ணா கேப்டன் டிவியில் மக்கள் முழக்கம் நிகழ்ச்சியின் மூலம் மக்களை சந்திக்க வருகிறார்.
அன்றாடம் சமுதாயத்தில் மக்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை மையமாக வைத்து நடைபெறும் விவாத நிகழ்ச்சி இது. தமிழ் நாட்டில் பல ஊர்களில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஊர்களிலும் அப்பகுதி மக்கள் இவ்விவாத நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பேச்சாளர்களுக்கு நிதி உதவியும் அவர்களுக்கு தேவையான கல்வி உதவியும் வழங்குவது சிறப்பு அம்சம். கேப்டன் டி.வி.யில் ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு மக்கள் முழக்கம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
சன், ஜெயா, ராஜ் டிவிக்கு போட்டியாக வரும் 'கேப்டனின் முழக்கம்' மக்களை சென்றடையுமா? என்பதை எதிர்வரும் வாரங்களில் தெரிந்து கொள்ளலாம்.
Post a Comment