ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜாக்பாட் நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே பங்கேற்று வந்தனர். அதில் இனி ஆண்களும் பங்கேற்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அனுமதி அளித்துள்ளனர்.
நடிகை சிம்ரன் தொகுத்து வழங்கும் ஜாக்பாட் நிகழ்ச்சி ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. வித்தியாசமான இந்த கேம்ஷோ நிகழ்ச்சியில் இதுவரை பெண்கள் மட்டுமே பங்கேற்று வந்தனர்.
வெறும் கேள்வி-பதில் என்ற அறிவுபூர்வ எல்லையைத் தாண்டி, பெண்களுக்கான இந்த `கேம்ஷோ`வில் ஆண்களும் போட்டியாளர்களாக இப்போது பங்கேற்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுகளின் எண்ணிக்கையும், அவைகளின் மதிப்பும் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
Post a Comment