சென்னை, : தமிழ் சினிமாவில் படைப்பாளிகளுக்கு மரியாதை இல்லை என்று இயக்குனர் பன்னீர் செல்வம் கூறினார்.
'ரேனிகுன்டா' படத்தை அடுத்து பன்னீர் செல்வம் இயக்கியுள்ள படம், '18 வயசு'. ஜானி, காயத்ரி, சத்தியேந்திரன், ரோகிணி, ஜேஎஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்துள்ள இந்தப் படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது.
படம் பற்றி பன்னீர்செல்வம் கூறியதாவது:
இந்தப் படம் காதல் கதைதான் என்றாலும் புது கான்செப்டாக இருக்கும். நேர்மையான படமாகவும் இருக்கும். பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. இப்போது, உலகத் திரைப்படங்கள் இருபது முப்பது ரூபாய்க்கு சாலைகளில் டிவிடிகளாக கிடைக்கிறது. அதை அப்படியே படமாக்கும் சூழல் தமிழ் சினிமாவில் காணப்படுகிறது. இப்படி காப்பி அடித்து படமெடுப்பவர்களுக்கான மரியாதையும் பாராட்டும் சுயமாக சிந்தித்து படமெடுக்கும் படைப்பாளிகளுக்கு கிடைப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும். காப்பி அடித்து படமெடுப்பவர்களை யாரும் கண்டிக்காவிட்டால், விமர்சிக்காவிட்டால் பாலா, சேரன், லிங்குசாமி போன்ற மண்ணின் கதைகளை கொண்டு வருகின்ற இயக்குனர்கள் இனி வராமல் போகும் சூழல் உருவாகிவிடும். அடுத்த தலைமுறை இயக்குனர்களும் காப்பி அடிக்கத் தொடங்கினால் சுய சிந்தனை இல்லாமல் நமது மண்ணின் கதைகள் காணாமல் போகும் அபாயம் இருக்கிறது.
இவ்வாறு பன்னீர் செல்வம் கூறினார்.
'ரேனிகுன்டா' படத்தை அடுத்து பன்னீர் செல்வம் இயக்கியுள்ள படம், '18 வயசு'. ஜானி, காயத்ரி, சத்தியேந்திரன், ரோகிணி, ஜேஎஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்துள்ள இந்தப் படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது.
படம் பற்றி பன்னீர்செல்வம் கூறியதாவது:
இந்தப் படம் காதல் கதைதான் என்றாலும் புது கான்செப்டாக இருக்கும். நேர்மையான படமாகவும் இருக்கும். பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. இப்போது, உலகத் திரைப்படங்கள் இருபது முப்பது ரூபாய்க்கு சாலைகளில் டிவிடிகளாக கிடைக்கிறது. அதை அப்படியே படமாக்கும் சூழல் தமிழ் சினிமாவில் காணப்படுகிறது. இப்படி காப்பி அடித்து படமெடுப்பவர்களுக்கான மரியாதையும் பாராட்டும் சுயமாக சிந்தித்து படமெடுக்கும் படைப்பாளிகளுக்கு கிடைப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும். காப்பி அடித்து படமெடுப்பவர்களை யாரும் கண்டிக்காவிட்டால், விமர்சிக்காவிட்டால் பாலா, சேரன், லிங்குசாமி போன்ற மண்ணின் கதைகளை கொண்டு வருகின்ற இயக்குனர்கள் இனி வராமல் போகும் சூழல் உருவாகிவிடும். அடுத்த தலைமுறை இயக்குனர்களும் காப்பி அடிக்கத் தொடங்கினால் சுய சிந்தனை இல்லாமல் நமது மண்ணின் கதைகள் காணாமல் போகும் அபாயம் இருக்கிறது.
இவ்வாறு பன்னீர் செல்வம் கூறினார்.
Post a Comment