சுதந்திர தினத்தன்று கலைஞர் தொலைக்காட்சியில் திரையுலகத் தம்பதியர் சிநேகா - பிரசன்னா பங்கேற்று தங்களின் மணவாழ்க்கையின் மகிழ்ச்சிகரமான சம்பவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.
சுதந்திர தினத்திற்கும் திரையுலகினருக்கும் என்ன சம்பந்தம் என்று பலரும் கேட்கலாம். ஆனால் திரையுலகினர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்றால்தானே பலரும் ரசித்து பார்க்கின்றனர். பொதிகை தொலைக்காட்சி தொடங்கி சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் வரை திரையுலக நடிகர் நடிகையர்கள் பேட்டி இன்றி எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்புவதில்லை.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று கலைஞர் தொலைக்காட்சியில் நட்சத்திர தம்பதியர் சிநேகா - பிரசன்னாவின் மகிழ்ச்சிகரமான விசயங்களை நேயர்களுக்கு ஒளிபரப்புகின்றனர். சினிமாவில் ஜோடியாக நடித்தது தொடங்கி மண வாழ்க்கையில் இணைந்தது வரை மகிழ்ச்சிகரமான தருணங்களை சிநேகா - பிரசன்னா தம்பதியர் நேயர்களோடு பகிர்ந்து கொள்கின்றனர்.
சுதந்திர தம்பதி என்ற பெயரில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி புதன்கிழமை இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Post a Comment