மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஏக்தா கபூர்

|

Ekta Kapoor Likely Be Arrested

‘க்யா சூப்பர் கூல் ஹைன் கம்' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்ததாக திரைப்பட தயாரிப்பாளரும், தொலைக்காட்சி தயாரிப்பாளருமான ஏக்தா கபூர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தி தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமல்லாது தமிழ் சேனல்களிலும் சீரியல்களை தயாரித்து வருபவர் ஏக்தா கபூர். ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி அதன் மூலம் பிரபலமடைவது அவரது வாடிக்கை. இப்பொழுது மதரீதியான சர்ச்சை ஒன்றில் சிக்கிக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான க்யா சூப்பர் கூல் ஹைன் ஹம் திரைப்படத்தில் இரண்டு நாய்களுக்கு பாதிரியார் ஒருவர் திருமணம் நடத்தி வைப்பதாக காட்சி எடுக்கப்பட்டிருந்தது. இது கிருஸ்துவமதத்தை சார்ந்தவர்களின் மனதை புண் படுத்தும் விதமாக இருப்பதாக அமைந்திருப்பதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனியிடம் முறையிட்டனர். இதனையடுத்து சர்ச்சைக்குரிய அந்த காட்சியை நீக்கிவிடுமாறு ஏக்தா கபூரிடம் அறிவுறுத்தப்பட்டது. அந்தக் காட்சி சென்சார் செய்யப்பட்டப்பட்ட பின்னரே ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கோவா சட்டமன்றத்திலும் காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. இதனிடையே ஏக்தா கபூரின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிருஸ்துவ மதத்தினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Post a Comment