தயாரிப்பாளர் ஏவிஎம் முருகன் மரணம்!

|

சென்னை: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவி எம் முருகன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 77.

மாரடைப்பு காரணமாக அவர் இன்று பிற்பகல் 1 மணிக்கு இறந்தார்.

ஏவி மெய்யப்பச் செட்டியாரின் மகன்களுள் மூத்தவர் எம் பழனியப்பன். அவருக்கு அடுத்தவர் எம் முருகன். தந்தை உயிருடன் இருந்த போதே இவர் தனியாகப் பிரிந்து, தயாரிப்பு மற்றும் இதர சினிமா பணிகளில் ஈடுபட்டார். எம் குமரன், எம் சரவணன் மற்றும் எம் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தனியாக தொழில் செய்து வந்தனர்.

பின்னர் முருகன் மட்டும் தனியாகப் பிரிந்து படங்கள் தயாரித்தார். ஏவிஎம்மின் பழைய கறுப்பு வெள்ளைப் பட லேபுக்கு இவர் பொறுப்பில் இருந்தது.

தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் ஏவிஎம் முருகன். புத்தகங்கள் எழுதுவதிலும் பெரும் ஆர்வம் உடையவர் முருகன். துணை தேடும் நெஞ்சம். தர்ம பாதை போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

ஏவிஎம் முருகனுக்கு ரஞ்சனி என்ற மனைவியும், கார்த்திக் என்ற மகனும், அங்கயற்கண்ணி, லதா என்ற மகள்களும் உள்ளனர்.

அவரது இறுதிச் சடங்கு நாளை நடக்கும் என்று தெரிகிறது.

முருகனின் மறைவுக்கு திரையுலகினர் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

 

Post a Comment