சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் தாயார் காளியம்மாள் (87) உடல்நலக் குறைவு காரணமாக உடுமலைப்பேட்டையில் நேற்று காலமானார்.
உடுமலைப்பேட்டையில் தனது மகளுடன் வசித்து வந்தார் காளியம்மாள். கடந்த மாதம் மாடிப் படியில் ஏறும்போது தவறி விழுந்ததில் அவருடைய காலில் கடுமையான காயம் ஏற்பட்டது.
அதற்காக வீட்டில் இருந்தபடி சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அவர் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு உடுமலைப்பேட்டையில் இன்று மாலை நடைபெறுகிறது.
முன்தினமே உடுமலைக்கு வந்துவிட்ட கவுண்டமணிக்கு பலரும் ஆறுதல் கூறினர்.
Post a Comment