பெங்களூர் : கன்னட டிவி நடிகை ஹேமஸ்ரீ கொலையில் ஆந்திர அமைச்சருக்கு தொடர்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகவைச் சேர்ந்த கோடீஸ்வரர் சுரேந்திர பாபுவை நடிகை ஹேமஸ்ரீ சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் சுரேந்திரபாபு ஏற்கனவே திருமணமானவர் என்றும், குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் ஹேமாஸ்ரீக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சுரேந்திரபாபுவுடன் வாழ விருப்பம் இல்லை என்று போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இருவரும் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூருக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் அங்குள்ள பண்ணை வீட்டில் தங்கினார்கள். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திடீரென்று ஹேமாஸ்ரீ மர்மமாக இறந்தார்.
உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஹேமாஸ்ரீ மரணம் அடைந்ததாக சுரேந்திரபாபு போலீசில் கூறினார். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஹேமஸ்ரீயின் பெற்றோர்கள் சந்தேகம் எழுப்பினர். பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஹேமாஸ்ரீயின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் அவர் இயற்கையாக மரணம் அடையவில்லை என்றும் தெரிவித்தனர். ஹேமாஸ்ரீக்கு அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்து இருந்ததாகவும் கூறினர்.
அரசியல் பிரமுகருக்கு தொடர்பு
இதையடுத்து நடிகை ஹேமாஸ்ரீயை கொலை செய்ததாக சுரேந்திரபாபுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து பரிசோனை செய்தனர். அதில் ஹேமாஸ்ரீ கொலை செய்யப்பட்ட பின் ஆந்திர அமைச்சர் ஒருவருடன் சுரேந்திரபாபு பலதடவை பேசி இருப்பது தெரியவந்தது. அத்துடன் ஹேமாஸ்ரீ இருந்த காரில் காங்கிரஸ் பிரமுகர் ரவி என்பவரும் இருந்துள்ளார்.
தடயங்கள் அழிப்பு
இதையடுத்து ஆந்திர அமைச்சரிடம் விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால் அமைச்சர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை அனந்தபூர் பண்ணை ஊழியர்கள் அழித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. அமைச்சரின் தூண்டுதலில் போலீஸ் விசாரணைக்கும் அவர்கள் ஒத்துழைக்க மறுப்பதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.
ஹேமஸ்ரீயின் கொலை வழக்கு விசாரணை போலீசார் தீவிரபடுத்தியுள்ள நிலையில் கொலையாளிகளுக்கும் கொலையில் தொடர்புடையவர்களும் விரைவில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment