எம்ஜிஆர், ரஜினி படங்களை இயக்கிய ஜெகநாதனுக்கு மூச்சுத் திணறல்!

|

சென்னை: பிரபல சினிமா இயக்குநர் ஏ ஜெகநாதனுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எம்ஜிஆரின் இதயக்கனி, ரஜினியின் மூன்றுமுகம், தங்கமகன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ ஜெகநாதன். கமல், ராஜராஜன் உள்பட பலரை வைத்து 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தனது மகளைப் பார்ப்பதற்காக திருப்பூர் சென்றிருந்தார். அப்போது அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக திருப்பூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்குப்பின் அவர் வீடு திரும்பி நலமாக இருப்பதாக அவருடைய மனைவி தெரிவித்தார்.

 

Post a Comment